துடையூர் விஷமங்களனாதர் கோவில் திருச்சி டு மணச்சநல்லூர் ரோடில் நொச்சியம் இல் இருந்து சேலம் செல்லும் ரோடில் அதாவது 5 கி.மி தூரத்தில் உள்ளது இந்த ஆலயம் இது ஒரு சிவன் கோவில் இந்த கோவில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது இந்த கோவிலில் உள்ள சிவன் மிகவும் சக்தி உள்ளவர் இவர் முனிவர்களாலும் தேவர்களாலும் வணங்க்கபட்டவர், இந்த கோவிலில் 3 மணி நேரம் எரியும் படி விளக்கு போட்டால் நினைத்த காரியம் கைகூடும், இந்த கோவில் ஒரு ஆற்றின் கரையில் அமைந்து உள்ளது, இங்கு சிவன் விஷமங்களநாதர் என்ற பெயரில் இருக்கிறார் இங்கு வீணை சரஸ்வதியும் வீணை குருபகவானும் இருகிறார்கள் அவர்களுக்கு தேன் வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்தால் குழந்தைகளுக்கு படிப்பு நன்றாக வரும், முதலில் சிவனை கும்பிட்டுவிட்டு பின்பு தாயாரை வணங்கிவிட்டு அப்புறம் சரஸ்வதி மற்றும் குருபகவான் வணங்கி பின்பு சிவன் கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி பின்பு வெளியில் உள்ள பாம்பு புற்றுக்கு அர்ச்சனை செய்து வணங்கி வந்தால் நிரந்தர வேலை கிடைக்கும் , கணவன் மனைவி உறவு மிகவும் சிறந்த முறையில் இருக்கும், பிரிந்து இருந்தவர்கள் ஒன்று சேருவர் , குடும்பத்தில் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர், செல்வம் பெருகும், வேலை சம்பந்தமான குறைகள் நீங்கும்.
No comments:
Post a Comment