Monday, 14 July 2014

முஸ்லீம் நண்பர்கள் கவனத்திற்கு .

முஸ்லீம் நண்பர்கள் கவனத்திற்கு .

தற்போது ரம்ஜான் மாதம் ஆக இருப்பதால் தாங்கள் விரதம் இருந்து வருகிறீர்கள் மேலும் இந்த நாட்களில் தங்கள் இன மக்கள் அனைவரும் உங்களால் முயன்ற அளவு தானம் கொடுத்து வருகிறீர்கள் அது மிகவும் நல்லது தான் அனால் அதில் ஒரு வேதனையான விஷயம் ஒன்று உள்ளது அதை நீங்கள் அனைவரும் கொஞ்சம் திருத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் .

அதாவது இந்த மாதத்தில் உங்கள் வீட்டிற்கு தானம் கேட்க வருபவர்கள் 5 அல்லது 10 பேர் ஒரு அணியாக வருகிறார்கள் அதில் வருபவர்கள் எல்லாம் முதியவர்களோ அல்லது உடல் ஊனமுற்றவர்கள் கிடையாது மிக சிலர் மட்டும் தான் அப்படி இருகிறார்கள், அப்படி வருபவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் வயது பெண்கள் மற்றும் சிறு வயது பெண்கள் மற்றும் குழந்தைகள் அப்படி வருபவர்களுக்கு நீங்கள் காசு கொடுத்தால் அந்த சிறுவர்கள் மற்றும் இளம் பெண்களின் உள்ளத்தில் பிச்சை எடுக்கும் எண்ணம் மிக அதிகமாக வளரும் அது இளைய சமுதாயத்தின் மீது உழைக்கும் நம்பிக்கையை அழித்துவிடும், சிறுவர்கள் மனதில் நாம் கை ஏந்தி பிச்சை எடுத்தால் பிழைத்து கொள்ளலாம் என மனதில் பதிந்து விடும் அப்புறம் அவர்கள் உழைக்க மாட்டார்கள் அதற்கு நீங்கள் ஒரு காரணமாக இருக்காதீர்கள் .

மேலும் அப்படி வருபவர்கள் அடுத்தவர் வீடுகளில் வெளியே இருக்கும் செருப்பு, ஷூ, காய்ந்து கொண்டு இருக்கும் நல்ல துணிகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு போய்விடுகிறார்கள் அதனால் அடுத்த வீட்டில் குடி இருபவர்களுக்கு மிகுந்த சிரமங்கள் உள்ளது .

குறிப்பு : இளம் சமுதாயத்தினரை பிறரிடம் கையேந்த வைக்காதீர்கள் .

கை மற்றும் கால்கள் நன்றாக உள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் எதாவது ஒரு வேலை கொடுத்து அதற்கு ஒரு கூலி கொடுங்கள்.

முதியவர்கள் மற்றும் உடல் ஊனம் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக நிறைய உதவி தங்களால் முடிந்தவரை உதவி செய்யுங்கள்.

கை மற்றும் கால் நன்றாக உள்ளவர்களுக்கு நீங்கள் உதவி செய்வதால்  அவர்கள் உழைக்க மறுத்து பிச்சை எடுக்கிறார்கள் அதற்கு நீங்கள் ஒரு காரணமாக இருக்காதீர்கள்.

No comments:

Post a Comment